ஈழத்தமிழருக்கான குரல் ஒன்று ஓய்ந்தது
ஞாநி நாடறிந்த மூத்த பத்திரிகையாளர். எதையும் எவர் முன்னும் நேர்படப்பேசும் மனத் திண்மை பெற்ற மனிதராக இதழியல் துறையில் இயங்கி வருபவர். அவரது ஓ பக்கங்களுக்கென்று தனித்த வாசகர் வட்டம் உண்டு. அப்பக்கங்களின் வெக்கை தாளாமல் சில இதழ்கள் வெளியிட மறுத்த வரலாறும் உண்டு. தீம்தரிகிட, தினமணி கதிர் உள்ளிட்ட சில இதழ்களின் ஆசிரியர் பொறுப்பிலும் பணியாற்றியவர்.