மேலும்

தவறு செய்து விட்டேன்- என்கிறார் மகிந்த

mahinda-trinco (1)பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் அதிபர் தேர்தலுக்கு அழைப்பு விடுத்ததன் மூலம் தாம் தவறு செய்து விட்டதாக, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடுவெலவில் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய அவர்,

“ எனக்கு நடந்தது இன்று மைத்திரிபால சிறிசேனவுக்கு நடந்திருக்கிறது. இரண்டு பேரும் பதவிக்காலத்தின் குறைந்தது ஒரு ஆண்டு காலத்தை இழந்திருக்கிறோம்.

நான் இதனை தியாகம் என்று அழைக்கிறேன். அதற்குப் பின்னர் நான் சர்வாதிகாரி என்று அழைக்கப்பட்டேன். இப்போது யார் சர்வாதிகாரி?

ஐந்து ஆண்டுகளுக்குப் பதிலாக, ஆறு ஆண்டுகள் தாம் பதவியில் இருக்க முடியுமா என்று தெரிந்து கொள்ள சிறிலங்கா அதிபர் விரும்பினார்.

எனக்கு என்ன நடந்ததோ, அதுவே மைத்திரிக்கும் நடந்திருக்கிறது. இதனைத் தான் தன் வினை தன்னைச் சுடும் என்பார்கள்.

சிறிலங்கா அதிபர் உச்சநீதிமன்றத்திடம் கருத்தை அறிந்து கொள்வதற்கு முன்னர், தன்னைச் சுற்றியிருப்பவர்களின் ஆலோசனையை கேட்டிருக்க வேண்டும்.

இப்போது அவர் இழந்து விட்டார். இப்போது அவர் பல்வேறு சாட்டுப்போக்குகளுடன் வருகிறார். இழந்தது நல்லது. அப்போது தான் மக்களால் அறிந்து கொள்ள முடியும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *