சீனா- இந்திய உறவுகளை சீர்படுத்துவாரா கோகலே? – சீன ஊடகத்தின் பார்வை
சீனாவிற்கான இந்தியாவின் முன்னாள் தூதுவர் விஜய் கோகலேயை இந்தியாவின் புதிய வெளியுறவுச் செயலராக நியமிக்கவுள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் 2018ம் ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்துள்ளது. தற்போது இந்திய வெளியுறவுச் செயலராகப் பதவி வகிக்கும் எஸ்.ஜெய்சங்கரின் பதவிக் காலம் ஜனவரி 28ல் முடிவுறவுள்ள நிலையிலேயே இந்திய அரசாங்கம் புதிய வெளிவிவகாரச் செயலராக விஜய் கோக்கலேயை நியமிப்பது தொடர்பாக அறிவித்துள்ளது.