மேலும்

நாள்: 11th January 2018

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்புக்கு தேர்தல் ஆணையம் தடை

ஈபிஆர்எல்எவ் – தமிழர் விடுதலைக் கூட்டணி இணைந்து உருவாக்கிய கூட்டணியினர்  தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரை உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பயன்படுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடைவிதித்துள்ளது.

19ஆவது திருத்தம் மைத்திரிக்கு பொருந்தாவிடின் தனக்கும் பொருந்தாது என்கிறார் மகிந்த

19 ஆவது திருத்தச்சட்டம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலத்தை பாதிக்காது என்றால், அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடத் தனக்கும் தடையிருக்காது என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஒன்றுக்கு மேற்பட்ட புள்ளடியிடப்பட்டால் வாக்குச்சீட்டு நிராகரிக்கப்படும்

உள்ளூராட்சித் தேர்தலில் வாக்காளர்கள் வாக்குச்சீட்டில் ஒரே ஒரு இடத்தில் மாத்திரமே புள்ளடியிட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன ஆறு ஆண்டுகள் அதிபர் பதவியில் இருக்கலாம் – சட்டமா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, 2015 ஜனவரி 9ஆம் நாள் தொடக்கம், ஆறு ஆண்டுகளுக்கு அதிபராகப் பதவி வகிக்க முடியும் என்று சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

மைத்திரியின் பதவிக்காலத்தை முடிவு செய்ய இன்று கூடுகிறது உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் தொடர்பான முடிவை எடுப்பதற்காக சிறிலங்கா உச்சநீதிமன்றத்தின் திறந்த அமர்வில் இன்று விவாதம் நடத்தப்படவுள்ளது.

இந்தியா செல்கிறார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். பீகார் மாநிலத்தில் உள்ள ராஜ்கிர் நகரில் இன்று ஆரம்பமாகும் தர்ம தம்ம மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுவதற்காகவே சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இந்தியா செல்லவுள்ளார்.

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு 45.27 மில்லியன் டொலர் கடனுதவி வழங்குகிறது இந்தியா

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு, 45.27 மில்லியன் டொலர்கள் ( 6.9 பில்லியன் ரூபா) கடன் உதவியை இந்தியா வழங்கவுள்ளது. இதற்கான உடன்பாட்டில் இந்தியாவும் சிறிலங்காவும் நேற்று கையெழுத்திட்டுள்ளன.

அஞ்சல் வாக்குச்சீட்டுகள் அனுப்புவதை பிற்போட்டது தேர்தல்கள் ஆணைக்குழு

உள்ளூராட்சித் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குச்சீட்டுகளை அஞ்சல் திணைக்களத்திடம் கையளிப்பதை தேர்தல்கள் ஆணைக்குழு பிற்போட்டுள்ளது.

தமிழ்ப் பெண்கள் பாடசாலை அதிபரை முழந்தாளிட்டு மன்னிப்புக் கேட்க வைத்த முதலமைச்சர்

தனது உத்தரவைப் புறக்கணித்த தமிழ்மொழி மூல பெண்கள் பாடசாலை அதிபர் ஒருவரை, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, முழங்காலில் நின்று, மன்னிப்புக் கேட்க வைத்துள்ளார்.