மேலும்

தற்கொலைக் குண்டுதாரிக்கு உதவிய பெண்ணுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை

gavelடக்ளஸ் தேவானந்தாவை படுகொலை செய்வதற்கு முயன்ற விடுதலைப் புலிகளின் பெண் தற்கொலைக் குண்டுதாரிக்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்ட பெண் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

2004ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் நாள், ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை இலக்கு வைத்து, தாக்குதல் நடத்துவதற்காக சென்ற பெண் தற்கொலை குண்டுதாரி ஒருவரை கொள்ளுப்பிட்டி காவல்நிலையத்துக்கு கொண்டு சென்று சோதனையிட முயன்ற போது அவர் குண்டை வெடிக்க வைத்து உயிரை மாய்த்துக் கொண்டார். இந்தச் சம்பவத்தில் 5 சிறிலங்கா காவல்துறையினர் கொல்லப்பட்டனர்.

குறித்த தற்கொலைக் குண்டுதாரிக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த செல்வகுமார் சத்தியலீலா என்ற மூன்று பிள்ளைகளின் தாயார் கைது செய்யப்பட்டார்.

அவர் கடந்த 14 ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆராச்சியினால் அளிக்கப்பட்டது.

குற்றம்சாட்டப்பட்ட பெண் தண்டனையை அனுபவிக்க வேண்டிய காலத்துக்கும் அதிகமாகவே சிறையில் இருந்து விட்டார் என்பதால்,  15 ஆண்டுகளுக்கு  ஒத்திவைக்கப்பட்ட 24 மாத சிறைத்தண்டனையையும், 25 ஆயிரம் ரூபா அபராதத்தையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *