மேலும்

நாள்: 10th January 2018

சிறிலங்கா நாடாளுமன்றத்தை அதிர வைத்த “திருடன்…. திருடன்” முழக்கம்

“திருடன்… திருடன்…. ரணில் திருடன்” என்று கூட்டு எதிரணியினரும், “திருடன்… திருடன்…. மகிந்த திருடன்” என்று ஐதேகவினரும் மாறி மாறி குரல் எழுப்பியதால் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று பெரும் முறுகல் நிலை ஏற்பட்டது.

மைத்திரியின் பதவிக்காலம் குறித்து முடிவெடுக்க 5 நீதியரசர்களைக் கொண்ட குழு நியமனம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் தொடர்பாக முடிவு செய்வதற்காக, உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்களைக் கொண்ட அமர்வு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம் – ரணில் மீது மர்மப் பொருள் வீச்சு

பிணைமுறி மோசடி தொடர்பாக விவாதிக்க சிறிலங்கா பிரதமரின் கோரிக்கையின் பேரில் இன்று கூட்டப்பட்ட நாடாளுமன்றத்தில் கடுமையான கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.

ஆணைக்குழு அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதில் இழுபறி

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பான அதிபர் ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

கொழும்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சிறிலங்கா அதிபரின் கோரிக்கை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள சந்தேகத்தை தீர்த்து வைப்பதற்கு சட்டமா அதிபர் தரப்பின் விளக்கத்தையும் சிறிலங்கா உச்சநீதிமன்றம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பரபரப்பான சூழலில் இன்று அவசரமாகக் கூடுகிறது சிறிலங்கா நாடாளுமன்றம்

பரபரப்பான அரசியல் சூழலில் சிறிலங்கா நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

அமெரிக்கத் தூதரக உயர் அதிகாரி கிழக்கு கடற்படைத் தளபதியுடன் முக்கிய பேச்சு

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியான கெல்லி பில்லிங்ஸ்லி திருகோணமலையில் உள்ள சிறிலங்கா கடற்படையின் கிழக்குப் பிராந்தியத் தலைமையகத்துக்குச் சென்று பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

கொக்காவிலில் கோர விபத்து – நான்கு இளைஞர்கள் பலி

யாழ்.- கண்டி நெடுஞ்சாலையில் கொக்காவில் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற கோர விபத்தில் நான்கு பேர் பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

புர்கா, கறுப்புக் கண்ணாடி, முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு வாக்களிப்பு நிலையத்தில் தடை

முகத்தை மறைக்கும் ஆடைகள், மற்றும் பொருட்களை அணிந்து கொண்டு வாக்காளர்கள் எவரும் வாக்களிப்பு நிலையத்துக்குச் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.