மேலும்

மாதம்: December 2017

கொழும்புத் துறைமுகத்தில் பிரெஞ்சுப் போர்க்கப்பல்

பிரெஞ்சுக் கடற்படையில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட போர்க்கப்பலான FS Auvergne  நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணமாக நேற்று கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளது.

தமிழ்க் குடும்பத்தை சிறிலங்காவுக்கு நாடுகடத்தியது கனடா

ஐந்து ஆண்டுகளாக கனடாவில் வசித்து வந்த தமிழ்க் குடும்பம் ஒன்று, புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் நேற்று சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. நேற்றுமாலை மொன்றியல் விமான நிலையத்தில் இருந்து இவர்கள் விமானம் ஒன்றில் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளனர்.

வடக்கிலும் போட்டியில் குதிக்கிறது இதொகா

வரப்போகும் உள்ளூராட்சித் தேர்தல்களில் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி வடக்கில் சேவல் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளது.

ஆனந்தசங்கரியுடனான கூட்டு தற்காலிக ஏற்பாடு தான் – சுரேஸ் பிரேமச்சந்திரன்

உள்ளூராட்சித் தேர்தல் தேசிய அளவில் முக்கியத்துவமற்றது என்றும், இந்தத் தேர்தலில், ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிடும் தமது முடிவு தற்காலிக ஏற்பாடு தான் என்றும் ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

பலமான கூட்டணியாக கூட்டமைப்பு போட்டியிடும் – மாவை

உள்ளூராட்சித் தேர்தலுக்கான ஆசனப்பங்கீடுகள் மற்றும் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் நேற்று 6 மணிநேரம் பேச்சுக்களை நடத்தியுள்ளன. நேற்று மாலை 3 மணிக்கு ஆரம்பித்த பேச்சுக்கள், இரவு 9 மணி வரை நீடித்தன.

மத வழிபாட்டு இடங்களை தேர்தல் பரப்புரைகளுக்குப் பயன்படுத்தத் தடை

எந்தவொரு தேர்தல் பரப்புரைக்கும் மத வழிபாட்டு இடங்களைப் பயன்படுத்துவதை தேர்தல் ஆணைக்குழு தடை செய்திருப்பதாக, சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய    தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலினால் பொறுப்புக்கூறலுக்குப் பின்னடைவு

கூட்டு எதிரணி வலுவான நிலையில் இருப்பதாலும், உள்ளூராட்சித் தேர்தலினாலுமே, காணாமல்போனோர் பணியகத்தை செயற்படுத்துதல் உள்ளிட்ட பொறுப்புக்கூறல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் இழுபறிப்படுவதாக தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் கலாநிதி ஜெகான் பெரேரா தெரிவித்துள்ளார்.

27 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் கை சின்னத்தில் களமிறங்குகிறது சிறிலங்கா சுதந்திரக் கட்சி

வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல்களில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி கை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளது.

சிறிலங்காவுக்கு போர்க்கப்பல் விற்க தனி ஜெட் விமானத்தில் வருகிறார் ரஷ்ய ஆயுத நிறுவன தலைவர்

சிறிலங்கா கடற்படைக்கு ஜிபார்ட் 5.1 ரக ஆழ்கடல் ரோந்துக் கப்பலை ரஷ்யாவிடம் இருந்து கொள்வனவு செய்யும் 135 மில்லியன் டொலர் உடன்பாட்டின் சிறிலங்கா அரசாங்கம் இந்த வாரம் கையெழுத்திடவுள்ளது.

பெப்வரி 10 இல் உள்ளூராட்சித் தேர்தல்?

வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்னரே, உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறும் நாள் தேர்தல் ஆணையத்தினால் அறிவிக்கப்படும் என்று, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.முகமட் தெரிவித்துள்ளார்.