வடக்கிலும் போட்டியில் குதிக்கிறது இதொகா
வரப்போகும் உள்ளூராட்சித் தேர்தல்களில் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி வடக்கில் சேவல் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளது.
முல்லைத்தீவு பிரதேச சபை மற்றும் வவுனியா நகரசபை ஆகியவற்றுக்கு, இதொகா சேவல் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.
அத்துடன் கொழும்பில் கொலன்னாவ நகரசபைக்கும் இதொகா சேவல் சின்னத்தில் தனித்துப் போட்டியிடவுள்ளது.
இதொகாவின் பட்டியலில் பிரபா கணேசனின் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களும் போட்டியிடவுள்ளனர்.