மேலும்

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டத் தலைவர் கொழும்பு வருகிறார்

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டத் தலைவர் ஒருவர் அடுத்த வாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலகத் திணைக்களத்துக்கான உதவி அமைச்சர் வாங் யாஜுன், வரும் 12ஆம் நாள் தொடக்கம் 15ஆம் நாள் விரை சிறிலங்காவில் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தின் போது, வாங் யாஜுன் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19 ஆவது தேசிய காங்கிரஸ் மாநாடு குறித்து விளக்கமளிக்கவுள்ளார். இந்த மாநாடு, பீஜிங்கில் கடந்த ஒக்ரோபர் 18ஆம் நாள் தொடக்கம் 24ஆம் நாள் வரை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *