உதயசூரியன் கூட்டணியும் சாவகச்சேரி நகரசபைக்கு கட்டுப்பணம் செலுத்தியது
உள்ளூராட்சித் தேர்தலில் சாவகச்சேரி நகரசபைக்குப் போட்டியிடுவதற்கு, உதயசூரியன் சின்னத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டணி, கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈபிஆர்எல்எவ் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்காக, புதிய கூட்டணி ஒன்றை அமைத்துள்ளன.
இன்னமும் பெயர் அறிவிக்கப்படாத இந்தக் கூட்டணி, தமிழர் விடுதலைக் கூட்டணியின், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.
இந்தக் கட்சியின் சார்பில், சாவகச்சேரி நகரபைக்குப் போட்டியிடுவதற்கு நேற்று யாழ். மாவட்டச் செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
ஈபிஆர்எல்எவ்வைச் சேர்ந்த பிரமுகர்களான உதயகுமார், என்.அனந்தராஜ் ஆகியோர் கட்டுப்பணத்தைச் செலுத்தி வேட்புமனுவுக்கான விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர்.