மேலும்

வடக்கில் காணிகள் விடுவிப்புக்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு – தினேஸ் குணவர்த்தன கோரிக்கை

hszவடக்கில் சிறிலங்கா இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான பணிகளை ஒருங்கிணைக்க,  நாடாளுமன்றத் தெரிவுக்குழு  ஒன்றை அமைக்க வேண்டும் என்று, கூட்டு எதிரணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் தினேஸ் குணவர்த்தன வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வரவுசெலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளின் விடுவிப்பை நாடாளுமன்றத் தெரிவுக் குழு துரிதப்படுத்தும்.

வடக்கு காணிகள் விவகாரம் இப்போது அனைத்துலக மயப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைகள் உள்நாட்டு மட்டத்தில் தீர்க்கப்பட முடியும்.

இந்தப் பகுதிகளில் இப்போது கண்ணிவெடிகளை அகற்றும் செயற்பாடுகள் பெரும்பாலும் முடிவடைந்து விட்டன.” என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *