யாழ். குடாநாட்டில் 2 நாட்களில் 41 வாள்வெட்டு சந்தேகநபர்கள் கைது
யாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மையில் நிகழ்ந்த வாள்வெட்டு சம்பவங்களை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களில், 41 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவான் கணசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களில், யாழ்ப்பாணம், கோப்பாய், மானிப்பாய், சுன்னாகம் காவல் நிலையப் பகுதிகளில் சிறப்பு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வாள்வெட்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு, மூன்று காவல்துறைக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
காவல்துறை மா அதிபரின் வழிகாட்டலுக்கு அமைய, மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
கடந்தவாரம் யாழ்ப்பாணத்தில் நடந்த வாள்வெட்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் தொடர்ச்சியாகவே அண்மைய கைதுகள் இடம்பெற்றுள்ளன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.