மேலும்

Tag Archives: யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் இன்று “நீதிக்கான நீள் பயணம்” கவனயீர்ப்புப் பேரணி

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அனைத்துலக  நாளை முன்னிட்டு, “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில், யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணியும் அனைத்துலக மாநாடும் இடம்பெற்றுள்ளது.

அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி ‘நீதியின் ஓலம்’ பேரணி

செம்மணிப் புதைகுழி குறித்து அனைத்துலக விசாரணை தேவை என்ற கோரிக்கையை முன்வைத்து, முன்னெடுக்கப்பட்ட நீதியின் ஓலம்  போராட்டம், இன்று பேரணியுடன் நிறைவடைந்துள்ளது.

நேற்று மட்டும் செம்மணிப் புதைகுழியில் 15 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம், செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று மட்டும் 15 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சிறிலங்கா அமைச்சரின் நிகழ்வைப் புறக்கணித்து ஊடகவியலாளர்கள் போராட்டம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், தாக்கப்பட்ட ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக நீதியான விசாரணைகளை முன்னெடுக்க  வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில்  இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி கொழும்பிலும் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

செம்மணிப் புதைகுழியில் தோண்டத் தோண்ட வெளிவரும் எலும்புக்கூடுகள்

யாழ்ப்பாணம், செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 37ஆவது நாளான நேற்று 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணிப் புதைகுழியை பார்வையிடவுள்ள ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள்

இதுவரை 437 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள  யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியை  ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டக் குழுவொன்று, வரும் புதன்கிழமை  பார்வையிடவுள்ளது.

செம்மணிப் புதைகுழியில் இதுவரை 437 எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம், செம்மணி, சித்துப்பாத்தி, மனிதப் புதைகுழியில்  நேற்று மூன்றாம் கட்டத்தின் 36வது நாள்  அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது,  ஆறு எலும்புக் கூட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து அனைத்துலக விசாரணை கோரி போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு அனைத்துலக நீதி கோரி, யாழ்ப்பாணம் செம்மணியில் நேற்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செம்மணிப் புதைகுழியில் 400 ஐ நெருங்கிய எலும்புக்கூடுகள்

யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி, மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று மேலும் 03 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 07 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.