மேலும்

மராட்டிய முதல்வரைச் சந்தித்தார் மகிந்த

mahinda- devendra fatnavisஇந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நேற்று மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

பௌத்த மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக மகிந்த ராஜபக்ச, அவுரங்கபாத் சென்றிருந்தார்.

இதையடுத்து நேற்று மும்பையில் மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசை அவரது அதிகாரபூர்வ வதிவிடத்தில் சந்தித்தார்.

mahinda- devendra fatnavis

இந்தச் சந்திப்புத் தொடர்பாக மகாராஷ்டிர முதலமைச்சரின் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சுற்றுலா முதலீடு தொடர்பாக இரண்டு தலைவர்களும் உரையாடியதாக கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *