மேலும்

Tag Archives: மட்டக்களப்பு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை சிறையில் கேக் வெட்டி கொண்டாடிய பிள்ளையான்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்ற பின்னர்,  மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், கேக் வெட்டி கொண்டாடியதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிள்ளையானின் 6 துப்பாக்கிதாரிகளை கைது செய்ய சிஐடி நடவடிக்கை

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தனின் கீழ், பணியாற்றிய ஆறு துப்பாக்கிதாரிகளை  கைது செய்வதற்கு, குற்றப் புலனாய்வுத்துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக சிங்கள வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமைச்சர் குமார ஜெயக்கொடி மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்க முடிவு

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மீது இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளது.

செம்மணி குறித்து சர்வதேச விசாரணை- மட்டு. மாநகரசபையில் தீர்மானம்

யாழ்ப்பாணம், செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தக் கோரி, மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை பிள்ளையான் முன்னரே அறிந்திருந்தார்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் நடக்கப் போவது தொடர்பாக, கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் ( சிவநேசதுரை சந்திரகாந்தன்) முன்னரே அறிந்திருந்தார் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

பிள்ளையானின் 3 சகாக்களிடம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணை

பிள்ளையானின் மூன்று சகாக்களும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், 72 மணித்தியாலங்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அணுசக்தி கதிர்வீச்சு கண்டறியும் கருவிகள் இயங்கத் தொடங்கின

சிறிலங்கா கடற்படை தளங்களில் அண்மையில் நிறுவப்பட்ட ஐந்து அணு கதிர்வீச்சு கண்டுபிடிப்பு கருவிகளில் இருந்து, தரவுகளைப் பெறத் தொடங்கியுள்ளதாக சிறிலங்காவின் அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை தெரிவித்துள்ளது.

ஆண்டு இறுதிக்குள் பலாலி- இந்தியா இடையே விமான சேவை

பலாலி விமான நிலையத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்பமாகும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சஹ்ரான் குழுவின் இரண்டு பயிற்சி முகாம்கள் கண்டுபிடிப்பு

சஹ்ரான் காசிம் தலைமையிலான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மற்றொரு பயிற்சி முகாம், நேற்று மட்டக்களப்பு -வாழைச்சேனைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

முன்னாள் பாதுகாப்புச் செயலரை கைது செய்ய திட்டம்

ஈஸ்டர் ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களை தடுக்க தவறினார் என்ற குற்றச்சாட்டில் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ விரைவில் கைது செய்யப்படவுள்ளார் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.