நல்லூர் துப்பாக்கிச் சூடு – அனலைதீவைச் சேர்ந்த இருவர் கைது
நல்லூரில் நேற்று மாலை நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் நேற்றிரவு சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
நேற்று மாலை நல்லூரில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், உந்துருளி ஒன்றில் தப்பிச் சென்றிருந்தார்.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அனலைதீவைச் சேர்ந்த இரண்டு பேரை சந்தேகத்தின் பேரில் சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.