மேலும்

ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் சிறிலங்கா அதிபருடன் சந்திப்பு

maithri-feltman (1)சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் ஜெப்ரி பெல்ட்மன் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்காவில் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க செயற்பாடுகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் அமைதியைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை கண்காணிப்பதற்காக, ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் ஜெப்ரி பெல்ட்மன் மூன்று நாட்கள் பயணமாக கடந்த 19ஆம் நாள் சிறிலங்கா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

maithri-feltman (2)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *