மேலும்

காணாமல்போனோர் பணியகம்- ஐ.நா பொதுச்செயலர் பாராட்டு

antonio-guterres-1காணாமல்போனோர் பணியகத்தை உருவாக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் முடிவுக்கு ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

ஐ.நா பொதுச்செயலரின் சார்பில் அவரது பிரதி பேச்சாளர் பர்ஹான் ஹக் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’காணாமல்போன தமது அன்புக்குரியவர்கள் குறித்த உண்மையைத் தேடிக் கொண்டிருக்கும் அனைத்து இலங்கையர்களுக்காகவும், காணாமல் போனோர் செயலகம் அமைக்கப்படுவது ஒரு முக்கியமான மைல் கல் ஆகும்.

இதற்கான செயல்முறைகளுக்கு உதவ ஐ.நா தயாராக இருக்கிறது என்றும், சுதந்திரமான ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டு கூடிய விரைவில் இந்தச் செயலகம் செயற்படத் தொடங்கும் என்று ஐ.நா பொதுச்செயலர் எதிர்பார்ப்பதாக, குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *