மேலும்

அரசியலமைப்பு உருவாக்க விவகாரம் – இரண்டாக உடைந்தது கூட்டு எதிரணி

vimal-weerawansaஅரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தில், மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணி இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. இதையடுத்து, கூட்டு எதிரணியின் முக்கிய பங்காளிக் கட்சியான விமல் வீரவன்ச தலைமையிலான, தேசிய சுதந்திர முன்னணி அரசியலமைப்பு பேரவையில் இருந்து விலகியுள்ளது.

தமது கட்சியைச் சேர்ந்த ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசியலமைப்பு பேரவையின் செயற்பாடுகளில் இருந்து வெளியேறுவதாக, சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம், விமல் வீரவன்ச நேற்று கடிதத்தைக் கையளித்தார்.

அதேவேளை,மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணி தொடர்ந்தும் அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளில் ஈடுபடும் என்று அதன் பேச்சாளரான பந்துல குணவர்த்தன நேற்று தெரிவித்தார்.

மகிந்த ராஜபக்சவின் தலைமையில் நடந்த கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக முழு நாடாளுமன்றமும், அரசியலமைப்புப் பேரவையாக மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *