மேலும்

சிறிலங்கா- அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு

julia-raviசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப் நேற்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இரண்டு நாட்கள் பயணமாக அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப் நேற்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்,

அவர் நேற்று இரவு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில், அமைச்சர் ரவி கருணாநாயக்கவைச் சந்தித்துப் பேச்சுக்களில் ஈடுபட்டார்.

இதையடுத்து, இருவரும் இணைந்து கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

julia-ravi

அவுஸ்ரேலியப் பிரதமருடனான பேச்சுக்கள் ஆக்கபூர்வமானதாக இருந்தது என்று சிறிலங்கா வெளிவிவகார, அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.

பொருளாதார ஒத்துழைப்பு, அபிவிருத்தி ஒத்துழைப்பு, ஆட்கடத்தலை தடுத்தல், கல்வி மற்றும் திறன் விருத்தி, சுற்றுலா, நல்லிணக்கம், சிறிலங்காவின் அபிவிருத்தியில் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் பங்களிப்பு உள்ளிட்ட இருதரப்பு விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

கடல்சார் பாதுகாப்பு உள்ளிடட பிராந்திய பாதுகாப்பு சவால்கள் தொடர்பாகவும் கலந்துரையாடினோம்.” என்று குறிப்பிட்டார்.

அதேவேளை சிறிலங்காவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு அவுஸ்ரேலிய முழு ஒத்துழைப்பை வழங்கும் என்று அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *