மேலும்

திரியாய் கடற்பகுதியில் நீலத் திமிங்கலம் போர்ப் பயிற்சி – மரைன் படையினர் பங்கேற்பு

Blue Whale III (1)சிறிலங்கா கடற்படையின் மரைன் பற்றாலியன், நீலத் திமிங்கலம்-3 என்ற போர்ப் பயிற்சியை திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திரியாய் கடற்கரைப் பகுதியில்  நடத்தியுள்ளது.

ஈரூடகப் பயிற்சியுடன் இந்த நீலத் திமிங்கலம் -3 பயிற்சிகள் நேற்றுமுன்தினம் நிறைவடைந்தன.

சிறிலங்கா கடற்படையின் மரைன் படைப்பிரிவின் 2ஆவது பற்றாலியனைச் சேர்ந்த 159 படையினர் இந்தப் பயிற்சியில் பங்கேற்றனர்.

கடல் , தரை வழியாக வரக் கூடிய எத்தகைய அச்சுறுத்தலையும் எதிர்கொள்வதற்கேற்ற தயார் நிலையை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்தப் பயிற்சி முன்னெடுக்கப்பட்டது.

Blue Whale III (1)Blue Whale III (2)Blue Whale III (3)

இந்தப் பயிற்சியில், சிறிலங்கா கடற்படையின் 821 ஆவது இலக்க தரையிறக்க கப்பல், 4 அதிவேகத் தாக்குதல் படகுகள், ஒரு அதிவேக பீரங்கிப் படகு, 8 கரையோர ரோந்துப் படகுகள், மற்றும் விமானப்படையின் ஒரு எவ்-7 போர் விமானம் மற்றும் எம்.ஐ-17 உலங்குவானூர்திகள் என்பன ஈடுபட்டன.

இந்தப் பயிற்சிகளை சிறிலங்கா கடற்படையின் கிழக்கு பிராந்திய தளபதி றியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா நெறிப்படுத்தியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *