500 மெகாவாட் இயற்கை எரிவாயு மின் நிலையம் – ஜப்பான், இந்தியாவுக்கு அழைப்புக் கடிதம்
சிறிலங்காவில் 500 மெகாவாட் திறன்கொண்ட இயற்கை எரிவாயு மின் திட்டங்களை அமைப்பதற்கு, ஜப்பான் மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கு கடிதங்களை அனுப்பவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
அமைச்சர்கள் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் மலிக் சமரவிக்கிரம ஆகியோர் இணைந்து இந்தக் கடிதங்களுக்கு அனுமதி கோரும் பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தனர்.
ஜப்பான்- இந்திய கூட்டு முயற்சியாக, 500 மெகாவாட் மின் திட்டத்துடன் இணைந்ததாக, 250 மில்லியன் டொலர் செலவில் மிதக்கும் இயற்கை எரிவாயு முனையம், மற்றும் எரிவாயு விநியோக குழாய் என்பன அமைக்கப்படவுள்ளன.
கரவெலப்பிட்டியில் அமைக்கப்படவுள்ள இந்த மின் நிலையத்தை,அமைக்கும் பணியில் இந்தியாவின் தரப்பில் பெட்ரோ நெற் என்ற நிறுவனம் ஈடுபடவுள்ளது. ஜப்பானின் தரப்பில் இந்த நடவடிக்கையில் ஈடுபடவுள்ள நிறுவனம் இன்னமும் பெயரிடப்படவில்லை.