சிறிலங்கா கடற்படையின் முன்னாள் பேச்சாளருக்கு விளக்கமறியல்
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சிறிலங்கா கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமடோர் டி.கே.பி.திசநாயக்கவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான, கொமடோர் டி.கே.பி.திசநாயக்கவை கடந்த புதன்கிழமை மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்திருந்தனர்.
இன்று அவரை கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னிலைப்படுத்தினர்.
இதன்போதே, கொமடோர் டி.கே.பி.திசநாயக்கவை ஜூலை 19ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.