11 தமிழர்கள் கடத்தப்பட்ட சம்பவம் – சிறிலங்கா கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கைது
சிறிலங்கா கடற்படையின் முன்னாள் பேச்சாளரான கொமடோர் டி.கே.பி.தசநாயக்க இன்று பிற்பகல் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வெலிசறையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
2008- 2009 காலப்பகுதியில் 11 தமிழ் இளைஞர்கள் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவத்துக்கு உதவியாகவும் உடந்தையாகவும் இருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட கொமடோர் டி.கே.பி.தசநாயக்கவை கோட்டே நீதிவான் முன்பாக முன்னிலைப்படுத்தவுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.