மேலும்

Tag Archives: கடற்படை

ஆய்வுக்கப்பல்கள் மீதான தடை- சீனத் தூதுவர் கவலைப்படாதது ஏன்?

2023 ஒக்டோபரில் சிறிலங்காவுக்கு வந்த சீன ஆய்வுக் கப்பலான ஷி யான் 6, அண்மையில் சிறிலங்காவின் தனித்துவமான பொருளாதார கடல் எல்லைக்குள் இருந்து, தனது குழு உறுப்பினர் ஒருவருக்கு மருத்துவ உதவி கோரி, சிறிலங்கா கடற்படைக்கு ஆபத்து சமிக்ஞையை அனுப்பியது.

வெளிநாட்டு ஆய்வுக்கப்பல்கள் தொடர்பான செயற்பாட்டு வழிமுறைகள் வரைவு தயார்

சிறிலங்கா கடல் எல்லைக்குள் நுழையும் வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்கள் மற்றும் கடற்படைக் கப்பல்களை ஒழுங்குபடுத்துவதற்கான, புதிய நிலையான செயற்பாட்டு வழிமுறைகளை  அரசாங்கம் வரைவு செய்து முடித்து விட்டதாக, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கோட்டா தப்பிச் சென்றது பற்றிய இரகசியங்களை வெளியிட நீதிமன்றம் உத்தரவு

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற போது, ஏற்பட்ட  செலவுகள் மற்றும் தகவல்களை மறைப்பதற்கு சிறிலங்கா கடற்படை மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது.

சிறிலங்கா- ஜப்பான் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இணக்கம்

சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையிலான சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகள் குழு, ஜப்பானுக்கு இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டு, உயர்மட்ட சந்திப்புகளை நடத்தியுள்ளது.

உயர் விழிப்பு நிலையில் சிறிலங்கா கடற்படை

ஈரானிய போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டதை அடுத்து, நாட்டின் கடல் எல்லைக்குள் தொடர்ச்சியான நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, சிறிலங்கா கடற்படை உயர் விழிப்பு நிலையில் இருப்பதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு அமெரிக்கா முன்னரே தகவல் தெரிவிக்கவில்லை

சிறிலங்கா கடல் எல்லைக்கு அருகில் ஈரானிய போர்க்கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறித்து சிறிலங்கா அரசாங்கத்திற்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை என, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா கடற்படையின் திறன்களை வலுப்படுத்துவது குறித்து பேச்சு

கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை  வலுப்படுத்துவது குறித்து சிறிலங்காவின்  பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர,  சவூதி அரேபிய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் முகமத் பின் அப்துல் ரஹ்மான் அல்-கிரிபியுடன் உயர் மட்ட பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

3 மாதங்களில் சிறிலங்கா கடற்படைக்கு 6 இலட்சம் டொலர் வருமானம்

அனைத்துலக வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு சேவைகளை வழங்குவதன் மூலம் சிறிலங்கா கடற்படை 3 மாதங்களுக்குள் 598,350 அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டியுள்ளது.

திருகோணமலையில் கடற்படையின் இரகசிய வதை முகாம் – விரிவான அறிக்கை சிஐடி தாக்கல்

திருகோணமலை கடற்படைத் தலையமைகத்தில்  நிலத்துக்கு அடியில் உள்ள  கன்சைட் பகுதி, கடற்படையினரால் கடத்தப்பட்டவர்களைத் தடுத்து வைக்கும் தளமாக பயன்படுத்தப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக அதிகாரிகளுக்கு அமெரிக்க கடற்படை நிபுணர்கள் பயிற்சி

இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணு  விடயங்களை கையாளுவது தொடர்பாக அமெரிக்க கடற்படையின் வெடிபொருள் அகற்றும் நிபுணர்கள் சிறிலங்கா துறைமுக அதிகாரசபையின் பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் துறைமுக தீயணைப்புப் படையினருக்கு  பயிற்சியளித்துள்ளனர்.