மேலும்

Tag Archives: கடற்படை

சிறிலங்கா கடற்படையின் திறன்களை வலுப்படுத்துவது குறித்து பேச்சு

கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை  வலுப்படுத்துவது குறித்து சிறிலங்காவின்  பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர,  சவூதி அரேபிய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் முகமத் பின் அப்துல் ரஹ்மான் அல்-கிரிபியுடன் உயர் மட்ட பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

3 மாதங்களில் சிறிலங்கா கடற்படைக்கு 6 இலட்சம் டொலர் வருமானம்

அனைத்துலக வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு சேவைகளை வழங்குவதன் மூலம் சிறிலங்கா கடற்படை 3 மாதங்களுக்குள் 598,350 அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டியுள்ளது.

திருகோணமலையில் கடற்படையின் இரகசிய வதை முகாம் – விரிவான அறிக்கை சிஐடி தாக்கல்

திருகோணமலை கடற்படைத் தலையமைகத்தில்  நிலத்துக்கு அடியில் உள்ள  கன்சைட் பகுதி, கடற்படையினரால் கடத்தப்பட்டவர்களைத் தடுத்து வைக்கும் தளமாக பயன்படுத்தப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக அதிகாரிகளுக்கு அமெரிக்க கடற்படை நிபுணர்கள் பயிற்சி

இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணு  விடயங்களை கையாளுவது தொடர்பாக அமெரிக்க கடற்படையின் வெடிபொருள் அகற்றும் நிபுணர்கள் சிறிலங்கா துறைமுக அதிகாரசபையின் பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் துறைமுக தீயணைப்புப் படையினருக்கு  பயிற்சியளித்துள்ளனர்.

10 உலங்குவானுர்திகளை சிறிலங்கா விமானப்படையிடம் கையளித்தது அமெரிக்கா

அமெரிக்க கடற்படையினால்,  பத்து TH-57 (பெல் 206) உலங்குவானுர்திகள், கடந்த 7ஆம் நாள் சிறிலங்கா விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்திய இராணுவத் தளபதி பேச்சு

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி  சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை அவரது பணியகத்தில் நேற்றுச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

அமெரிக்காவுடனான பாதுகாப்பு உடன்பாடு- சோபா உடன்பாட்டின் முன்னோடியா?

வரிகளைக் குறைப்பதற்கான நிபந்தனையாகவும், சோபா ( SOFA) எனப்படும் படைகளை நிலைப்படுத்தும் உடன்பாட்டைக் கையெழுத்திடுவதற்கான முன்னோடியாகவும்,  சிறிலங்கா அரசாங்கம் அமெரிக்காவுடன் இராணுவ ஒப்பந்தத்தை மேற்கொண்டதா என்று  சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

கடற்படை முகாமை அகற்ற வேண்டாமென காரைநகர் மக்கள் கோருகிறார்கள்

காரைநகர் கடற்படை  முகாமை அகற்ற வேண்டாம் என்று,  அப்பகுதியில் வாழும் 147 தமிழ் மக்கள் கைச்சாத்திட்டு கடிதம் ஒன்றை கையளித்துள்ளதாக  சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

முன்னாள் கடற்படை புலனாய்வு அதிகாரிக்கு எதிராக புதிய ஆதாரங்கள் முன்வைப்பு

சிறிலங்காவின் முன்னாள் கடற்படை புலனாய்வுப் பணிப்பாளர், றியர் அட்மிரல் சரத் மொஹோட்டியின், பிணை மனு மீதான, தீர்ப்பு வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என குருநாகல மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் ஜப்பானிய நாசகாரி போர்க்கப்பல்

ஜப்பானிய கடற்படையின் அகிபோனோ (JMSDF AKEBONO) என்ற போர்க்கப்பல், நேற்றுக் காலை நல்லெண்ணப் பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.