அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்பாடு – அமைச்சரவைக்கு அறிவிப்பு
அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்துடன், 2007ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட கையகப்படுத்தல் மற்றும் குறுக்குச் சேவைகள் உடன்பாட்டை புதுப்பிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
முன்னைய உடன்பாடு, கடந்த மார்ச் 05ஆம் நாளுடன் காலாவதியாகியிருந்தது.
இதையடுத்தே, அமெரிக்காவுடனான இந்த உடன்பாட்டை நீடிப்பது தொடர்பாக, பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அமைச்சரவைக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இந்த உடன்பாட்டின் மூலம், பூகோள உறவுகளை முன்னேற்றுவதற்கும், பூகோள பாதுகாப்பு நிலையை உருவாக்குவதற்கும் இந்த உடன்பாடு உதவியாக அமையும் என்று சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா- சிறிலங்கா இடையில் இந்த உடன்பாடு விரைவில் கையெழுத்திடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.