மேலும்

மாதம்: February 2017

செவ்வாயன்று ஓய்வுபெறுகிறார் நீதியரசர் சிறிபவன் – புதிய தலைமை நீதியரசர் யார்?

சிறிலங்காவின் தலைமை நீதியரசர் கே.சிறிபவன் வரும் செவ்வாய்க்கிழமையுடன் (பெப்ரவரி 28) ஓய்வு பெறவுள்ள நிலையில், அடுத்த தலைமை நீதியரசராக யார் நியமிக்கப்படவுள்ளார் என்ற தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை.

வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது – ஐ.நா, மேற்குலக தலைவர்களுக்கு மைத்திரி அறிவிப்பு

போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்வதற்கான நீதிப் பொறிமுறையில், வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது என்று, ஐ.நாவுக்கும், சக்திவாய்ந்த மேற்குலக நாடுகளின் தலைவர்களுக்கும் தாம் அறிவித்து விட்டதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்தியா எம்மை நம்பவில்லை – கோத்தா

மேற்குலகின் தலையீடுகளால், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை இந்தியா நம்பவில்லை என்றும், மகிந்த அரசுக்கு எதிராகச் செயற்பட முடிவு செய்தது என்றும் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஒன்றுக்கு ஒன்று அன்பளிப்பு – போர் விமானங்களை விற்க சிறிலங்காவுக்கு பாகிஸ்தான் புதிய தூது

சிறிலங்காவுக்கு எட்டு ஜே.எவ்-17 ஜெட் போர் விமானங்களை விற்பனை செய்வதற்கான புதிய முயற்சிகளை பாகிஸ்தான் முன்னெடுத்திருப்பதாக அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிறிலங்காவின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளரின் வங்கிக் கணக்கில் 3.2 மில்லியன் ரூபா வந்தது எப்படி?

சிறிலங்காவின் முன்னாள் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவரான மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவின் வங்கிக் கணக்கில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 3.2 மில்லியன் ரூபா வைப்பில் இடப்பட்டுள்ளதாக, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ், முஸ்லிம் தலைவர்களைச் சந்திக்கிறார் மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச அடுத்த வாரம் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அமெரிக்க நாடாளுமன்றக் குழு சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள எட்டுப் பேர் கொண்ட அமெரிக்க நாடாளுமன்றக் குழுவினர், நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

சிறிலங்கா படைகளுக்கு அமெரிக்கா மீண்டும் பயிற்சி – மேலதிக வாய்ப்புகளை கோருகிறார் மைத்திரி

சிறிலங்கா படையினருக்கு மீண்டும் அமெரிக்கா பயிற்சியளிக்க ஆரம்பித்துள்ளது. இதனை வரவேற்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அவர்களுக்கு மேலதிக பயிற்சி வாய்ப்புகளை வழங்குமாறு, அமெரிக்காவிடம் கோரியுள்ளார்.

அடுத்தடுத்து சிறிலங்காவுக்கு படையெடுக்கும் அமெரிக்க நாடாளுமன்றக் குழுக்கள்

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் மற்றொரு குழு நேற்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.

ஆயுதங்களை வழங்காவிடினும் முக்கிய உதவியை வழங்கியது இந்தியா – கோத்தா

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பிரதானமாக சீனாவின் ஆயுதங்களே பயன்படுத்தப்பட்டாலும், சிறிலங்கா படையினருக்கான பயிற்சிகளை பெரும்பாலும் இந்தியாவே வழங்கியது என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.