மேலும்

தமிழ், முஸ்லிம் தலைவர்களைச் சந்திக்கிறார் மகிந்த

mahinda-pressசிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச அடுத்த வாரம் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளார்.

விரைவில் நடக்கவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காகவே மகிந்த ராஜபக்ச இந்தச் சந்திப்பை மேற்கொள்ளவுள்ளார்.

வரும் மார்ச் 7ஆம் நாள், பத்தரமுல்லையில் உள்ள மகிந்த ராஜபக்சவின் தலைமையகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

தமது தலைமையில் கூட்டு எதிரணி, வரும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் என்றும் மகிந்த ராஜபக்ச முன்னர் கூறியிருந்தார்.

தனது பலத்தை வெளிப்படுத்துவதற்காக அவர், தமிழ், முஸ்லிம் சமூகங்களின் ஆதரவைப் பெறும் முயற்சியில் இறங்கவுள்ளதாகவும் தெரியவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *