மேலும்

நாள்: 4th February 2016

தமிழில் சிறிலங்காவின் தேசிய கீதம் பாடப்பட்டபோது சம்பந்தன் கண்களில் கண்ணீர்

சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வின் இறுதியில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட போது, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனின் கண்கள் பனித்து கண்ணீர் முட்டியதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வில் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது

சிறிலங்காவின் 68ஆவது சுதந்திர நாள் நிகழ்வுகளின் இறுதியில் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது. காலிமுகத்திடலில் சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வுகள் இன்று காலை முதல் இடம்பெற்றன.

நாட்டினதும், படையினரதும் கௌரவம் பாதுகாக்கப்படும் – சிறிலங்கா அதிபர் வாக்குறுதி

சிறிலங்கா மக்களினதும், படையினரினதும் கௌரவத்தைப் பாதிக்காத வகையிலேயே ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வில் சம்பந்தன், சுமந்திரன் பங்கேற்பு

கொழும்பில் தற்போது நடைபெற்று வரும் சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும், சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

சிறிலங்காவை பொறுப்புக்கூற வைத்த பான் கீ மூனுக்கு கேம்பிரிஜ் பல்கலைக்கழக கலாநிதி பட்டம்

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுக்கு, பிரித்தானியாவில் புகழ்பெற்ற கேம்பிரிஜ் பல்கலைக்கழகம் கெளரவ சட்ட கலாநிதிப் பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது.

கொள்ளையடிக்க வருகிறார் சுஸ்மா, கூண்டிலேற்ற வருகிறார் ஹுசேன் – ஜி.எல்.பீரிஸ்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட்அல் ஹுசேன் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் ஆகியோரின் சிறிலங்கா பயணங்கள், நாட்டுக்கு எதிரான சிவப்பு சமிஞ்ஞையின் வெளிப்பாடு என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்.

இன்று சிறிலங்காவின் 68ஆவது சுதந்திர நாள் – தமிழிலும் தேசியகீதம் பாட ஏற்பாடு

சிறிலங்காவின் 68ஆவது சுதந்திர நாள் நிகழ்வு இன்று காலை கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெறவுள்ளது. இதில் சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் சிறிலங்காவின் தேசிய கீதம் பாடப்படவுள்ளது.

அனைத்துலக மட்டத்தில் சிறிலங்கா படைகளுக்கு பயிற்சி வாய்ப்பு – கடற்படையினரிடம் மைத்திரி உறுதி

உலகின் முன்னேறிய நாடுகளில் கிடைக்கும் புதிய தொழில்நுட்ப அறிவைப் பெற்றுக் கொள்ளும் வகையில், முப்படையினருக்கும் மேலதிக பயிற்சிகளை அனைத்துலக  மட்டத்தில், பெற்றுக் கொடுப்பதற்கான வாய்ப்புகளை தமது அரசாங்கம் கண்டறியும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

சொத்துகள் வாங்கிக் குவித்தது குறித்து பசில் ராஜபக்சவிடம் 6 மணிநேரம் விசாரணை

சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் நேற்று நிதி குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினர், ஆறு மணி நேரமாக விசாரணைகளை மேற்கொண்டனர்.

சிறிலங்காவின் சுதந்திர நாள் செய்தியிலும் மகன் கைது குறித்து புலம்பியுள்ள மகிந்த

சிறிலங்காவின் 68ஆவது சுதந்திர நாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியில் கூட, தனது மகன் கைது செய்யப்பட்டுள்ளது மற்றும் தனது குடும்பத்தினர் பழிவாங்கப்படுவது குறித்தே முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.