சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வில் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது
சிறிலங்காவின் 68ஆவது சுதந்திர நாள் நிகழ்வுகளின் இறுதியில் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது. காலிமுகத்திடலில் சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வுகள் இன்று காலை முதல் இடம்பெற்றன.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன காலையில், சிறிலங்காவின் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். அதையடுத்து சிங்களத்தில் தேசிய கீதம் வழக்கம் போலப் பாடப்பட்டது.
அதையடுத்து, சிறிலங்கா அதிபரின் உரை, முப்படைகளினதும் இராணுவ அணிவகுப்புகள் இடம்பெற்றன.
இந்த நிகழ்வுகளின் முடிவில், காலை 11.15 மணியளவில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது. அத்துடன் காலை நிகழ்வுகள் நிறைவடைந்தன.
சிறிலங்காவின் வரலாற்றில் நீண்ட காலத்துக்குப் பின்னர், சுதந்திர நாள் நிகழ்வில், தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது.
அத்துடன், சிறிலங்கா அதிபரின் உரை முடிந்த பின்னர், விழா அரங்கில், அதன் தமிழ் மொழிபெயர்ப்பும், வாசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.