மேலும்

நாள்: 20th February 2016

சீபா உடன்பாட்டுக்கு மறுத்ததால் தான் ராஜபக்ச ஆட்சியைக் கவிழ்த்தது இந்தியா – ரம்புக்வெல

இந்தியாவுடன் விரிவான பொருளாதார கூட்டு உடன்பாடு (சீபா) செய்து கொள்ள மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மறுத்தமையினால் தான், இந்திய உளவுப் பிரிவான ரோ, சிறிலங்காவில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தியது என்று குற்றம்சாட்டியுள்ளார், நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல.

சீனாவுடன் வலுவான கூட்டை எதிர்பார்க்கிறதாம் சிறிலங்கா

ஏனைய நாடுகளுடன் பொருளாதார உடன்பாடுகளைச் செய்து கொண்டிருந்தாலும், சீனாவுடன் வலுவான கூட்டை சிறிலங்கா பேண வேண்டியுள்ளதாக சிறிலங்காவின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மங்கள சமரவீரவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்

நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சிறிலங்கா இராணுவத்தினரின் கீழ்ப்படியாமை நிலையை எதிர்கொள்ள நேரிட்டதாக, எக்கொனமி நெக்ஸ்ட் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மகிந்த மயமாக்கப்பட்ட சட்டமாஅதிபர் திணைக்களம் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

2010ல் இடம்பெற்ற பொதுத் தேர்தலின் பின்னர் அமைச்சர்கள் பதவியேற்ற போது, வர்த்தமானி அறிவித்தலில் சட்டமா அதிபர் திணைக்களம் எந்த அமைச்சின் கீழ் என்பது குறிப்பிடப்படவில்லை.

சீனாவினால் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களைப் பார்வையிட அம்பாந்தோட்டை செல்கிறார் ரணில்

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், சீனாவின் முதலீட்டில் அம்பாந்தோட்டையில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை ஆய்வு செய்யும் பயணம் ஒன்றை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று மேற்கொள்ளவுள்ளார்.

சிறிலங்காவுக்கு உதவ வேண்டும் – ஒஸ்ரியாவிடம் சிறிலங்கா அதிபர் கோரிக்கை

சிறிலங்காவில் நீண்டகாலப் போரினால் ஏற்பட்ட பாதிப்புகளையும், இழப்புகளையும் சீராக்கவும், பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும், உதவ வேண்டும் என்று ஒஸ்ரிய அதிபரிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தியவர்களைத் தாக்கும் திடீர் சுகவீனம் – சிங்கப்பூர் மருத்துவமனையில் ராஜித

சிறிலங்காவின் சுகாதார அமைச்சரான ராஜித சேனாரத்னவுக்கு நேற்று திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, மேலதிக மருத்துவ பரிசோதனைக்காக சி்ங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.