சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வில் சம்பந்தன், சுமந்திரன் பங்கேற்பு
கொழும்பில் தற்போது நடைபெற்று வரும் சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும், சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
சிறிலங்காவின் 68ஆவது சுதந்திர நாள் நிகழ்வில் முதற்கட்ட நிகழ்வுகள் காலிமுகத் திடலில் இன்று காலை 8.45 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவரும், கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வை தமிழர்கள் நீண்ட காலமாகவே புறக்கணித்து வந்த நிலையில், இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் கடந்த முறை சுதந்திர நாள் நிகழ்வில் பங்கேற்றது குறித்து பரவலான விமர்சனங்கள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.