மேலும்

யோசித மீதான நடவடிக்கை – பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்காக காத்திருக்கிறது சிறிலங்கா கடற்படை

Yoshitha-Rajapaksaமகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், லெப்.யோசித ராஜபக்ச தனது பதவியை துஷ்பிரயோகம் செய்தது தொடர்பாக, அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்காக காத்திருப்பதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர், கப்டன் அக்ரம் அலவி,

‘மகிந்த ராஜபக்ச அதிகாரத்தில் இருந்த போது, யோசித ராஜபக்ச தனது பதவியை தவறாகப் பயன்படுத்தியது பற்றிய குற்றச்சாட்டு தொடர்பாக கடற்படை நடத்திய விசாரணை அறிக்கை பல வாரங்களுக்கு முன்னரே பாதுகாப்பு அமைச்சிடம் கையளிக்கப்பட்டு விட்டது.

இந்த விடயத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிப்பதற்காக, பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்காக சிறிலங்கா கடற்படை காத்திருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *