ஜப்பானின் அழைப்பின்றியே டோக்கியோ சென்றார் மகிந்த
ஜப்பானிய பேரரசர் அகிஹிடோவின் அழைப்பின் பேரில் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச ஜப்பானுக்குச் செல்லவில்லை என்று கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.
ஜப்பானிய பேரரசர் அகிஹிடோவின் அழைப்பின் பேரில் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச ஜப்பானுக்குச் செல்லவில்லை என்று கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவின் 68ஆவது சுதந்திர நாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியில் கூட, தனது மகன் கைது செய்யப்பட்டுள்ளது மற்றும் தனது குடும்பத்தினர் பழிவாங்கப்படுவது குறித்தே முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
பிரபாகரன் ஒரு பயங்கரவாதத் தலைவராக இருந்த போதிலும் அவர் தனது சொந்தச் சமூகத்திற்கு துரோகம் இழைக்க ஒருபோதும் நினைக்கவில்லை. பிரபாகரனின் அர்ப்பணிப்பு மனோநிலைக்கு மாறாக, மகிந்தவின் போலித்தனமான தேசப்பற்று எவ்வாறு அமைந்துள்ளது என்பதை யோசித மீதான ஆணைக்குழுவின் விசாரணை சுட்டிநிற்கிறது.
நிதிமோசடிக் குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, யோசித ராஜபக்ச உள்ளிட்ட நால்வர், சிறைச்சாலையில் வழங்கப்படும் உணவை உண்ண மறுப்பதாக, சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளர் துசார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
வெலிக்கடைச் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோசித ராஜபக்சவுக்கு, மேலதிக பாதுகாப்பு மட்டும் வழங்கப்பட்டுள்ளதாகவும், எந்தவிதமான மேலதிக சிறப்பு வசதிகளும் வழங்கப்படவில்லை என்றும், சிறைச்சாலைகள் திணைக்களப் பேச்சாளர் துசார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
தனது சகோதரனான யோசித ராஜபக்சவைக் கைது செய்துள்ள சிறிலங்காவின் நல்லாட்சி அரசாங்கத்துக்கு, எச்சரிக்கை விடுத்துள்ளார் மகிந்த ராஜபக்சவின் இளைய மகனான ரோகித ராஜபக்ச.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், லெப்.யோசித ராஜபக்ச தனது பதவியை துஷ்பிரயோகம் செய்தது தொடர்பாக, அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்காக காத்திருப்பதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.
நிதி மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் அதிபர் யோசித ராஜபக்ச நேற்று மாலை கடுவெல நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது, ராஜபக்ச குடும்பத்தினர் கலக்கத்துடன் ஒன்று குவிந்திருந்தனர்.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனும், சிறிலங்கா கடற்படை அதிகாரியுமான லெப்.யோசித ராஜபக்ச இன்று பிற்பகல் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறிலங்கா அதிபர் செயலகத்தின் அறிவுரையின் பேரில், லெப்.யோசித ராஜபக்ச மீது, சிறிலங்கா கடற்படை நடவடிக்கையை எடுக்கும் என்று சிறிலங்கா அரசின் பிரதம கொரடா கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.