மேலும்

புலிகளுக்கு நிதி சேகரித்தார் என ஈழத்தமிழர் மீது ஜேர்மனி நீதிமன்றில் குற்றச்சாட்டு

germany-courtவிடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதி சேகரித்தார் என்ற குற்றச்சாட்டில், ஈழத் தமிழர் ஒருவர் ஜேர்மனி நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

53 வயதான யோகேந்திரன் ஜி என்று மட்டும் நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள, இவர் மீது, 2007 தொடக்கம் 2009 வரையான காலப்பகுதியில் ஜேர்மனியின் ஹம்பேர்க் நகரில் விடுதலைப் புலிகளுக்காக நிதிசேகரித்தார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட போர் மற்றும், தீவிரவாதச் செயற்பாடுகளுக்காக 81ஆயிரம் யூரோவை இவர் திரட்டிக் கொடுத்ததாக,  ஹம்பேர்க் நீதிமன்றத்தில் சட்டவாளர்கள் தெரிவித்ததாக ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.

germany-court

அதேவேளை, 2007ஆம் ஆண்டு தொடக்கம் தாம் ஜேர்மனி குடிமகன் என்று குற்றம்சாட்டப்பட்டவர் தெரிவித்துள்ளார்.

அவரது தரப்பு சட்டவாளர் பேசுவதற்கு இன்று அனுமதிக்கப்படவில்லை. வரும் மார்ச் 7ஆம் நாள் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *