மேலும்

Tag Archives: விடுதலைப் புலிகள்

புலிகளின் தலைவர்கள் சரணடைவதை சிறிலங்கா இராணுவம் விரும்பவில்லை

போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளை அழிப்பதற்கே சிறிலங்கா இராணுவம் விரும்பியதாகவும், புலிகளின் தலைவர்கள் சரணடைவதை விரும்பவில்லை என்றும் முன்னாள் இராணுவத் தளபதி  பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

போரைத் தாமதிக்க முயன்ற ராஜபக்சவினர் – பொன்சேகா குற்றச்சாட்டு

2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்டப் போரைத் தாமதப்படுத்த முன்னாள்  அதிபர்களான மகிந்த ராஜபக்சவும், கோட்டாபய ராஜபக்சவும், முயற்சித்ததாக முன்னாள் இராணுவத் தளபதி  பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார்.

அனுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு

உள்நாட்டுப் போரின்போது அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும், சிறிலங்காவுக்கு ஆயுதங்களை விற்க மறுத்தபோது,  ஆயுதங்களை வழங்கிய முக்கிய நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று.

ஈழத்தமிழர் அரசியலின் எதிர்காலம்

உணர்ச்சி அரசியல், ஒரு சமூகத்தை ஒன்று திரட்டுவதில் சக்தி வாய்ந்ததாக இருந்தாலும், அது ஒரு நீடித்த அரசியல் தீர்வை அடைவதில் பல்வேறு சவால்களை உருவாக்குகிறது.

புலிகளின் தாக்குதலில் படுகாயமடைந்த சுமங்கல டயஸ் விமானப்படை தளபதியானார்

சிறிலங்கா விமானப்படைத் தளபதியாக, எயர் மார்ஷல் சுமங்கல டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று அவருக்கான நியமனத்தை வழங்கினார்.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட புலிகள் இயக்க சந்தேகநபர் விடுதலை

வெடிபொருட்களை வைத்திருந்தார் என்ற குற்றம்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர் ஒருவரை மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது.

ஜேர்மனியில் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் மீது போர்க்குற்ற வழக்கு

விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவருக்கு எதிராக ஜேர்மனியின் அரசாங்க சட்டவாளர்கள் நேற்று போர்க்குற்ற வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளதாக ‘ஏபி’ செய்தி வெளியிட்டுள்ளது.

அரசியல் கைதிகளே இல்லை – கைவிரித்த சிறிலங்கா அமைச்சர்

சிறைகளில் அரசியல் கைதிகள் எவரும் இல்லை என்று மறுத்துள்ள சிறிலங்காவின் நீதி அமைச்சர், விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்கள் 54 பேருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளின் மீது விரைவில் விசாரணைகள் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.

புலிகளின் சீருடையில் படம் எடுத்து புலம்பெயர் தமிழர்களிடம் பணம் கறக்க முயன்றவர்கள் கைது

விடுதலைப் புலிகளின் சீருடையுடன் ஒளிப்படம் எடுத்துக் கொண்ட ஆறு இளைஞர்களை வவுனியாவில் சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

முன்னாள் போராளிகள் இருவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

வில்பத்து சரணாலயத்தில், எட்டு சிறிலங்கா படையினரைக் கொன்றார்கள் என குற்றம்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் இருவருக்கு 25 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.