100 கோடி ரூபா செலவில் கிளிநொச்சியில் உலகத் தமிழ் பண்பாட்டு மையம்
கிளிநொச்சியில் உலகத் தமிழ் பண்பாட்டு மையம் அடுத்த ஆண்டு 100 கோடி ரூபா செலவில் அமைக்கப்படவுள்ளது. புதுச்சேரியில் நேற்று ஆரம்பமான உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பன்னாட்டு மாநாட்டில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இந்த மாநாட்டில் சிறிலங்கா, கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா, சுவிற்சர்லாந்து. தென்னாபிரிக்கா, உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 50 தமிழ் பேராளர்களும், இந்தியாவில் இருந்து 150 தமிழ் பேராளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த மாநாட்டில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கனேடிய செயற்பாட்டாளர் நடா ராஜ்குமார் தகவல் வெளியிடுகையில்,
‘2017ஆம் ஆண்டு உலகத் தமிழ் பண்பாட்டு மையம் 100 கோடி ரூபா செலவில் கிளிநொச்சியில் அமைக்கப்படும்.
ஐக்கிய நாடுகள் அமைப்பு போன்று இரு உருவாக்கப்படும். இதில் தமிழ் பேசும் மக்கள் வாழும் 160இற்கு மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இடம்பெறுவர்.
பண்பாடு மற்றும் மொழி தொடர்பான முடிவுகளே இதில் எடுக்கப்படும். அரசியல் முடிவுகள் எடுக்கப்படாது.” என்று தெரிவித்தார்.