மேலும்

தமிழ் மக்களின் பிரச்சினைகள் இந்தியப் பிரதமரிடம் எடுத்துக் கூறுவேன் – சம்பந்தனிடம் ஜெய்சங்கர் உறுதி

sampanthan-jaishankar (1)வடக்கில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் எடுத்துக் கூறுவதாக இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார்.

சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்திய போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

கொழும்பில் தாஜ் சமுத்ரா விடுதியில் இன்று காலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் போது, வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அரசியலமைப்பு மாற்றம், உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து, இந்திய வெளிவிவகாரச் செயலரிடம், இரா. சம்பந்தன் எடுத்துக் கூறியுள்ளார்.

sampanthan-jaishankar (1)sampanthan-jaishankar (2)

சுமார் ஒரு மணிநேரம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சந்திப்பில் இந்திய வெளிவிவகாரச் செயலருடன், சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா, மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடக இணைப்புச் செயலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *