மேலும்

Tag Archives: நாடாளுமன்றம்

அதிபர் தேர்தலுக்கு முன் பொதுத்தேர்தலுக்கு வாய்ப்பு – சிறிலங்கா அதிபர்

இந்த ஆண்டு அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் வாய்ப்புகள் உள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று காலை முடிவு செய்கிறார் மகிந்த

சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று பிற்பகல் மீண்டும் கூடவுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின், நாடாளுமன்றக் குழு இன்று  காலை 11 மணியளவில் கூடவுள்ளது.

சிறிலங்கா அதிபரின் சட்டவிரோத உத்தரவுகளை புறக்கணிக்குமாறு சபாநாயகர் கோரிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அபகரித்துக் கொண்டுள்ளார் என்று குற்றம்சாட்டியுள்ள சபாநாயகர் கரு ஜெயசூரிய, அவரது சட்டவிரோதமான உத்தரவுகளை புறக்கணிக்குமாறும் அரச பணியாளர்களிடம் கோரியுள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றம் கலைப்பு – என்ன சொல்கிறார்கள் இவர்கள்…?

சிறிலங்கா நாடாளுமன்றம் நேற்று நள்ளிரவுடன் கலைக்கப்பட்டுள்ள நிலையில், சிறிலங்கா அதிபரின் இந்த நடவடிக்கைக்கு- அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றம் கலைப்பு – அமெரிக்கா ஆழ்ந்த கவலை

சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைக்கும், அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முடிவு குறித்து, அமெரிக்கா ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற கலைப்பு – உண்மையில்லையாம்

நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக வெளியாகிய செய்திகளில் உண்மையில்லை என்று சிறிலங்கா அரசாங்க தகவல் திணைக்களம் நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் 14ஆம் நாளே கூடும்- அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டார் சிறிசேன

சிறிலங்கா நாடாளுமன்றத்தை எதிர்வரும் 14ஆம் நாள் மீண்டும் கூட்டுவதற்கான அறிவிப்பை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றம் 16ஆம் நாள் தான் கூடும் – மகிந்தானந்த

நாடாளுமன்றம் வரும் 16ஆம் நாளே கூட்டப்படும் என்று மகிந்த ராஜபக்ச ஆதரவு, கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மையை நிரூபித்தாலும் ரணிலுக்கு பதவி கிடைக்காது – உதய கம்மன்பில

நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க பெரும்பான்மை பலத்தை நிரூபித்தாலும், அவருக்கு நாங்கள் பிரதமர் பதவியை வழங்கமாட்டோம் என்று சூளுரைத்துள்ளார் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில.

திங்கட்கிழமை நாடாளுமன்றம் கூடாது – சுசில் பிரேம ஜெயந்த

சிறிலங்கா நாடாளுமன்றம், வரும் திங்கட்கிழமை கூடுவதற்கு வாய்ப்பில்லை என்று, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம ஜெயந்த தெரிவித்துள்ளார்.