மேலும்

ஜோசப் படுகொலை, பிரகீத் கடத்தல் – மேலும் இரு சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் கைது

Arrestமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை மற்றும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக மேலும் இரண்டு சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர், இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மேற்படி இரண்டு சம்பவங்கள் தொடர்பாகவும், ஏற்கனவே கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வரும், சந்தேக நபர்கள் அளித்த தகவலின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு விசாரணை அதிகாரிகள், விசாரணைகளை நடத்தி வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *