மேலும்

ஐ.எஸ் தீவிரவாதத்தை முறியடிக்க சிறிலங்கா படைகள் தயார் நிலையில் – பாதுகாப்பு அமைச்சு

srilankan-isசிறிலங்காவில் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்) தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்கள் இயங்கினால் அவர்களை கண்டறிய சிறிலங்காவின் பாதுகாப்புப் படைகள் தயார் நிலையில் இருப்பதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அத்தகைய தொடர்புகள் அல்லது ஐ.எஸ் அமைப்பின் தோற்றம் குறித்த சாத்தியங்கள்  குறித்து எந்த நேரத்திலும் விழிப்புடன் இருப்பது குறித்து பாதுகாப்புப் படைகளும், புலனாய்வு அமைப்புகளும்  திட்டவட்டமான உத்தரவாதம் கொடுக்க விரும்பகின்றன.

இது பாதுகாப்புப் படைகளினதும் தேசிய புலனாய்வு அமைப்பினதும் பிரதான பொறுப்பாகும்.

அதேவேளை, ஊடகங்கள் சில  முக்கியமான உணர்வு ரீதியான விடயங்களை வெளியிடுவது, எதிர்மறையானதாகவும்,  அததகைய சக்திகளை அடையாளம் காணும் முயற்சிகளைப் பாதிப்பதாகவும் அமைந்து விடும்.

நிலைமைகள் பீதியை ஏற்படுத்தும் அளவுக்கோ, எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கோ இல்லை என்றும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும்,  சிறிலங்காவில் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பாக, இன்னமும் ஆராயப்பட்டு வருவதாகவும், சரியான மதிப்பீடுகள் செய்யப்படாமல் எதையும் பகிரங்கப்படுத்த முடியாது என்றும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *