ரஷ்ய பாதுகாப்புச் சபையின் பிரதி செயலாளருடன் சிறிலங்கா பாதுகாப்பு செயலர் சந்திப்பு
ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பாதுகாப்பு செயலாளர், எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த, ரஷ்ய பாதுகாப்பு சபையின் பிரதி செயலாளரும், ரஷ்ய கூட்டமைப்பின் அரச ஆலோசகருமான அலெக்சாண்டர் நிகோலாயெவிச் வெனடிக்டோவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
மொஸ்கோவில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலின் போது, இரு அதிகாரிகளும் பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு தற்போதைய இருதரப்பு விடயங்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
குறிப்பாக, சிறிலங்கா மற்றும் ரஷ்ய கூட்டமைப்பின் ஆயுதப் படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
நீண்டகால பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் பாதுகாப்பு மற்றும் இராணுவ-தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பிற்கான புதிய வழிகளை ஆராய்வது குறித்தும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஈடுபாட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட இராணுவ ஒத்துழைப்பு மற்றும் அது தொடர்பான முன்னெடுப்புகள் மூலம் சிறிலங்கா பயனடைவதற்கான வாய்ப்புகள் குறித்தும் இருவரும் கலந்தாலோசித்துள்ளனர்.

