மேலும்

நாள்: 18th August 2015

மாவட்ட ரீதியான முடிவுகள் – 92 ஆசனங்களுடன் ஐதேக முன்னணியில்

சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் மாவட்ட ரீதியாக கட்சிகள் பெற்ற வாக்குகள் மற்றும் ஆசனங்கள் தொடர்பான இறுதி முடிவுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இதுவரை வெளியாகியுள்ள மாவட்ட முடிவுகளின் படி ஐ.ம.சு.மு 83 ஆசனங்களையும், ஐதேக 92 ஆசனங்களையும், ஜேவிபி 4 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.

இரு மாவட்டங்கள் ஐ.ம.சு.மு. வசமானது – ஒன்றில் கூட்டமைப்பு வெற்றி

சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு நேற்று நடத்தப்பட்ட தேர்தலில், இதுவரையில் யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை, மாத்தறை, பொலன்னறுவ ஆகிய மூன்று மாவட்டங்களின் அனைத்து தொகுதிகளுக்குமான முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன.

திருகோணமலையில் ஐதேகவுக்கு 2, கூட்டமைப்புக்கு 1, ஐ.ம.சு.முக்கு 1 ஆசனம்

திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலைத் தொகுதியை தமிழரசுக் கட்சியும், மூதூர் தேர்தல் தொகுதியை ஐதேகவும், சேருவெல தொகுதியை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் கைப்பற்றியுள்ளன.