மேலும்

இரு மாவட்டங்கள் ஐ.ம.சு.மு. வசமானது – ஒன்றில் கூட்டமைப்பு வெற்றி

elections_secretariatசிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு நேற்று நடத்தப்பட்ட தேர்தலில், இதுவரையில் யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை, மாத்தறை, பொலன்னறுவ ஆகிய மூன்று மாவட்டங்களின் அனைத்து தொகுதிகளுக்குமான முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன.

இதில், 207,577 வாக்குகளுடன் யாழ்ப்பாண மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ். மாவட்டத்தை தம்வசப்படுத்தியுள்ளது..

அதேவேளை, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றுள்ளது.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 196,980 வாக்குகளுடன் மொத்தமுள்ள 4 தொகுதிகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியுள்ளது. இங்கு ஐதேக 130,433 வாக்குகளைப் பெற்றுள்ளது.

மாத்தறை மாவட்டத்தில், உள்ள 7 தொகுதிகளில் ஒரு தொகுதியை ஐதேகவும், ஏனைய ஆறு தொகுதிகளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் கைப்பற்றியுள்ளன. இங்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 250,505 வாக்குகளைப் பெற்றுள்ளது. ஐதேக 186,685 வாக்குகளைப் பெற்றுள்ளது.

பொலன்னறுவ மாவட்டத்தில் மொத்தமுள்ள 3 தொகுதிகளில் 2 ஐ ஐதேகவும், ஒன்றை ஐ.ம.சு முயும் கைப்பற்றியுள்ளன. வாக்குகள் அடிப்படையில், ஐதேக 118, 845 வாக்குகளையும், ஐ. ம.சு.மு, 103,172 வாக்குகளையும் பெற்றுள்ளன.

எனினும் இந்த மாவட்டங்களுக்கான அதிகாரபூர்வ ஆசன ஒதுக்கீடு இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *