மேலும்

ஐ.நா அறிக்கை சிறிலங்காவில் அரசியல் அழுத்தங்களை கொடுக்கும் – சம்பந்தன்

sampantharஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் வெளியிடப்படவுள்ள அறிக்கை, சிறிலங்காவில் அரசியல் ரீதியான அழுத்தங்களைக் கொடுக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“போர்க்குற்றங்கள் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட்டிருந்தால், அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.

எனவே எதிர்காலத்தில் இதுகுறித்துக் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டாலும் மக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. இதன் காரணமாகவே இந்தப் பிரச்சினை அனைத்துலக ரீதியாக தோற்றம் பெற்றுள்ளது.

அனைவருக்கும் சமமான உரிமைகளை வழங்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், இனங்களுக்கு இடையில் ஒற்றுமையைக் கட்டியெழுப்ப முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *