மேலும்

வெற்றி பெற்றாலும் பிரதமர் பதவி கிடையாது – மகிந்தவுக்கு மைத்திரி கடிதம்

mahinda-maithriவரும் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 113 ஆசனங்களை வென்றாலும் கூட, பிரதமராகி விட முடியாது என்று, மகிந்த ராஜபக்சவுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் என்ற வகையில் மைத்திரிபால சிறிசேன எழுதியுள்ள கடிதத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திர மன்னணி அரசாங்கத்தில் இதற்கு முன்னர் பிரதமராகப் பதவி வகிக்காத சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரே பிரதமராக வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நிமால் சிறிபால டி சில்வா, ஜோன் செனிவிரத்ன, சமல் ராஜபக்ச, அதாவுட செனிவிரத்ன, ஏ.எச்.எம்.பௌசி, சுசில் பிரேமஜெயந்த, அனுர பிரியதர்சன யாப்பா போன்ற கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் அடுத்த பிரதமராவதற்கு மகிந்த ராஜபக்ச ஆதரவு வழங்க வேண்டும் என்றும் மகிந்த ராஜபக்சவிடம் மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன் இனவாதப் பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும் மகிந்த ராஜபக்சவிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *