மேலும்

நாள்: 26th June 2015

சிறிலங்கா நாடாளுமன்றம் கலைப்பு – நள்ளிரவில் வெளியாகிறது வர்த்தமானி அறிவிப்பு

சிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான சிறப்பு வர்த்தமானி அறிவிப்பில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னமும் நியாயம் கிடைக்கவில்லை – சரணடைந்த போராளிகளின் உறவினர்கள் ஐ.நாவில் கதறல்

இலங்கையில் 2009-ம் ஆண்டு ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடந்த போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக உலகின் பல நாடுகளும் இலங்கைக்கு கண்டனம் தெரிவித்தன. ஐ.நா. மனித உரிமை அமைப்பும் படுகொலைகள் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

புலிகளின் முகாம்களுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியவருக்கே மரணதண்டனை

மிருசுவில் படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவித் தாக்கும் படையணியைச் சேர்ந்த சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க, மற்ற படையினர் பயந்து போயிருந்த போது தாம் விடுதலைப் புலிகளின் முகாம்களுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் அப்துல் கலாம்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் கலாநிதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம், இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

மகிந்தவை மைத்திரி சந்திக்கவில்லை – அதிபர் செயலகம் அறிவிப்பு

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுடன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு பேச்சுக்களை நடத்தியதாக வெளியான செய்திகளை சிறிலங்கா அதிபர் செயலகம் மறுத்துள்ளது.

எவராலும் கருத்தில் கொள்ளப்படாத புலம்பெயர் மக்களின் உரிமைகள் – பிரான்செஸ் ஹரிசன்

சிறிலங்காவில் தற்போது பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகள் தொடர்பாகப் பேசப்படுகின்றது. ஆனால் இன்னமும் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் எவ்வாறான உரிமைகளை இழந்து வாழ்கின்றனர் என ஆராயப்படவில்லை.

இராணுவத்தை வெளியேறக் கோரும் உரிமை விக்னேஸ்வரனுக்கு உள்ளது – நாடாளுமன்றில் சம்பந்தன்

வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் என்ற வகையில், தனது நிர்வாகத்தின் கீழுள்ள பகுதியில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்று கூறுவதற்கும் அதனை வலியுறுத்துவதற்கும் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு அனைத்து உரிமையும் உள்ளது என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

24 மணி நேரமும் புலனாய்வுத் தகவல்கள் திரட்டப்படுகின்றன – சிறிலங்கா இராணுவப் பேச்சாளர்

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்த வகையிலும் அச்சுறுத்தல் இல்லை என்று சிறிலங்காவின் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் தொடர்ந்த மோசமான மனித உரிமை மீறல்கள் – அமெரிக்க அறிக்கையில் குற்றச்சாட்டு

சிறிலங்காவில் கடந்த ஆண்டிலும் மனித உரிமைகள் பிரதானமான பிரச்சினைக்குரிய விவகாரமாக இருந்தது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள, நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான 2014ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மைத்திரி – மகிந்த நேற்றிரவு சந்திப்பு – ஒன்றரை மணிநேரம் பேச்சு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நேற்றிரவு சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.