சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் அப்துல் கலாம்
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் கலாநிதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம், இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
மூன்று நாள் பயணமாக நேற்று கொழும்பு வந்த கலாநிதி அப்துல் கலாம், இன்று அதிபர் செயலகத்தில் சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பில், சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க மற்றும், கொழும்புக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா ஆகியோரும் கலந்து கொண்டனர்.