மேலும்

நாள்: 17th June 2015

வித்தியா வழக்கிற்கு பயங்கரவாத தடைச்சட்டம் தேவையா? – கேள்வி எழுப்புகிறார் சுரேஸ் பிரேமச்சந்திரன்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவது தொடர்பாக,  தமிழர் அரசியல் தலைமைகள் ஒன்றுகூடி நுணுக்கமாக, நுட்பமாக ஆராய வேண்டிய தேவை எழுந்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர், சுரேஸ் பிரேமச்சந்திரன்  தெரிவித்துள்ளார்.

விசாரணைப் பொறிமுறை குறித்து உயர்மட்டத்தில் உள்ளக கலந்துரையாடல்

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்கான நம்பகமான பொறிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக, சிறிலங்காவின் உயர்மட்ட அதிகாரிகள் உள்ளக கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி கொலன்னே தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் சீனாவின் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் குழு

சிறிலங்கா இராணுவத்தின் தியத்தலாவ இராணுவப் பயிற்சி முகாமில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சீனாவின் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

20ஆவது திருத்தம் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டது

தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்கான 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான யோசனை, நேற்று நள்ளிரவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்க அச்சகர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

சிறிலங்காவுடன் தரைவழி இணைப்பை ஏற்படுத்த இந்தியா திட்டம் – 23 ஆயிரம் கோடி ரூபா செலவாகும்

இந்தியாவையும் சிறிலங்காவையும் தரைவழிப் போக்குவரத்து மூலம் இணைக்கும் திட்டத்தை இந்திய அரசாங்கம் கொண்டிருப்பதாக இந்தியாவின் தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

ஒபாமாவின் சிறிலங்கா வருகை குறித்து அமெரிக்க தூதரகத்துக்கு தெரியாதாம்

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிறிலங்காவுக்கு வருகை தரவுள்ளது தொடர்பான அதிகாரபூர்வ தகவல் ஏதும் தமக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் 59 முகாம்களை மூடவில்லை – சிறிலங்கா இராணுவத் தலைமையகம் மறுப்பு

சிறிலங்காவில் புதிய அரசாங்கம் கடந்த ஜனவரி மாதம் பதவிக்கு வந்த பின்னர், யாழ்ப்பாணக் குடாநாட்டில் 59 இராணுவ முகாம்கள் மூடப்பட்டுள்ளதாக, வெளியான ஊடகச் செய்திகளை சிறிலங்கா இராணுவத் தலைமையகம் நிராகரித்துள்ளது.

உள்நாட்டு விசாரணை நம்பகமானதாக இருக்கும் – என்கிறார் விஜேதாச ராஜபக்ச

இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக விசாரிப்பதற்காக சிறிலங்கா அரசாங்கம் உருவாக்கும் உள்நாட்டுப் பொறிமுறை, அனைத்துலக அளவிலும் உள்நாட்டிலும் நம்பகம்மிக்க ஒன்றாக இருக்கும் என்று சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.