மேலும்

நாள்: 28th April 2015

215 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது 19வது திருத்தம்

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த சிறிலங்கா அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டம் சற்று முன்னர்,  215 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

19வது திருத்தம் மீதான வாக்கெடுப்பு ஒரு மணிநேரத்துக்கு ஒத்திவைப்பு

சிறிலங்காவில் பெரும் பரபரப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, நாடாளுமன்றத்தில் 19வது திருத்தச்சட்டம் மீதான வாக்கெடுப்பு ஒரு மணிநேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அட்மிரல் கரன்னகொடவின் இரகசியங்கள் விரைவில் வெளிவரும் – ரணில் விக்கிரமசிங்க

சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவின் செயற்பாடுகள் தொடர்பாக எதிர்காலத்தில்  பல ஆதாரங்கள் வெளிப்படுத்தப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

19வது திருத்தத்தை நிறைவேற்ற மைத்திரி பெரும் போராட்டம் – இணப்பாட்டை ஏற்படுத்த முயற்சி

19வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான ஆளும்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இழுபறிகளைத் தீருக்கும் கடைசி நேர முயற்சியில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர்க்குற்ற, மனித உரிமை மீறல் கரிசனைகளை சிறிலங்காவிடம் வெளிப்படுத்துவார் ஜோன் கெரி

சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் குறித்த அமெரிக்காவின் நீண்டகால கரிசனைகள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளை, சிறிலங்காவிடம் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி வலியுறுத்துவார் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேபாளத்தில் பழுதடைந்திருந்த சிறிலங்காவின் இராட்சத விமானம் – கொழும்பு நோக்கிப் புறப்பட்டது

நேபாளத்தில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப் பொருட்களையும், மீட்புப் பணியில் ஈடுபடுவதற்கான படையினர் மற்றும் மருத்துவர்களையும் ஏற்றிச் சென்ற சிறிலங்கா விமானப்படை விமானம், திருத்தப்பட்டு கொழும்பு நோக்கிப் புறப்பட்டுள்ளதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கியுடன் மைத்திரியை நெருங்கிய இராணுவ கோப்ரல் – நாமலிடமும் விசாரணை

அம்பாந்தோட்டையில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு வளையத்தை, நாமல் ராஜபக்சவின் மெய்க்காவலர் துப்பாக்கியுடன் ஊடறுத்து நுழைந்த விவகாரம் குறித்து, நாமல் ராஜபக்சவிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

19ஆவது திருத்தம் நிறைவேறுமா?- இன்று மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு

சிறிலங்காவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 19ஆவது அரசிலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது.

சிறிலங்காவில் அரசியல்தீர்வுக்கு ஏற்ற சூழல் – தமிழ்நாட்டு கட்சிகள் குழப்பக் கூடாது என்கிறார் மோடி

சிறிலங்காவில் நிலவும் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு ஒன்று காணப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நேற்று புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் குழுவொன்று சந்தித்துப் பேச்சு நடத்தியது.

19ஆவது திருத்தம் ஜனநாயகம், நல்லாட்சியை உறுதிப்படுத்தும் – நாடாளுமன்றத்தில் சம்பந்தன்

19ஆவது திருத்தச்சட்டம் ஜனநாயகத்துக்கு வழிகோலுவதுடன், நல்லாட்சியையும் உறுதிப்படுத்தும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.